விஜய் சேதுபதி-யின் க/பெ.ரணசிங்க்ம் படத்தின் அப்டேட்

விஜய் சேதுபதி-யின் க/பெ.ரணசிங்க்ம் படத்தின் அப்டேட் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.

விஜய் சேதுபதி-யின் க/பெ.ரணசிங்க்ம் படத்தின் அப்டேட்
vijaysethupathi kapaeranasingam

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்திற்கு க/பெ.ரணசிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை இயக்குனர் ‘பி. விருமாண்டி’ இயக்குகிறார் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில்

தற்போது படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது படக்குழு அந்த தகவலானது க/பெ.ரணசிங்கம் படத்தின் பாடல் வெளியீட்டை பற்றி தான்.

விஜய் சேதுபதி-யின் க/பெ.ரணசிங்க்ம் படத்தின் அப்டேட்

க/பெ. ரணசிங்கம் படத்தின் ‘அழகிய சிறுக்கி’ எனும் பாடல் இணையத்தில் இன்று வெளியானது இப்பாடலை பாடலாசிரியர் வைரமுத்து எழுதியுள்ளார். இப்பாடல் இன்று மாலை 7-மணிக்கு அதிகாரபூர்வமாக வெளியானது.

இதை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் கணக்கிலும் வெளியிட்டுள்ளார் இதனை அவரது ரசிகரகள் இணையத்தில் #Ranasingam1stsingle #kapaeranasingam #alagiyasirukki போன்ற ஹஸ்டாக் உருவாக்கி இணையத்தில் டிரென்ட் செய்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இருவரும் இணைந்து ஏற்கனவே ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்ம துரை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களில் நடித்துள்ளனர் தற்போது இவர்கள் மீண்டும் இணைந்து இருக்கும் படம் க/பெ. ரணசிங்கம்

இப்படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரமாக இப்படத்தில் நடித்துள்ளார் படத்திற்கு இசையமைப்பாளர் ‘ஹிப்ரான்’ இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி-யின் க/பெ.ரணசிங்கம் படத்தின் புதிய அப்டேட் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமின்றி சமுத்திரகனி , ‘பூ’ ராம், வேல. ராமமூர்த்தி, ரங்கராஜ் பண்டே உள்ளிட்ட பலர் இதில் நடித்து இருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் வேகமாக பரவியதை அடுத்து தமிழக அரசு வணிக வளாகம் , திரை அரங்குகள் போன்ற மக்கள் அதிகமாக இடங்களுக்கு தடை விதித்தது.

இதனை அடுத்து தமிழகத்தில் தேதிகள் அறிவிப்பின்றி திரை அரங்குகள் மூட உத்தரவுவிட்டது தமிழக அரசு. இதனால் திரைக்கு வர இருந்த அனைத்து திரைபடங்களும் வெளிவர முடியாமல் முடங்கின..

இதை தொடர்ந்து தமிழில் சில படங்கள் ஓடிடியில் வெளியாகுவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதன் வரிசையில் நடிகை ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தால் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

தமிழ் திரைப்படங்களில் முதன் முதலில் ஓடிடி தளத்தில் வெளியான முதல் திரைப்படம் நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் திரைப்படம்.

இதற்க்கு சினிமா துறை மற்றும் திரை அரங்குகள் சார்பில் பல்வேறு எதிர்ப்புகள் வெளியானாலும் இப்படம் ஓடிடியில் வெளியானது.

சமீபத்தில் பொன்மகள் வந்தால், பெண்குயின் போன்ற படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது போல் இப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக

தகவல்கள் வெளியான நிலையில் க/பெ.ரணசிங்கம் படத்தின் இயக்குனர் பி.விருமாண்டி இதனை முற்றிலும் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது க/பெ. ரணசிங்கம் தியேட்டரில் ரிலீஸ் ஆன பின்தான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது படத்தின் மீதமுள்ள பணிகளை முடித்த பின் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version