அறியவகை நோய் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறாரா சமந்தா?

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா அறிய வகை நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்..

samantha ruth prabhu movies
samantha

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரீட்சையமானவர் தான் நடிகை சமந்தா.

கடந்த 2015 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

பின்னர் கடந்த 2021 ஆம் பிற்பாதியில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் முழு மனதுடன் விவாகரத்து பெற்று தனி தனியே வாழ்ந்து வருகின்றனர்..

திருமண முறிவுக்கு பிறகு சமந்தா மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு மயோசிடிஸ் எனப்படும் நோய் கண்டறியபட்டுள்ளதாகவும்

அதற்காக தீவிர சிகிச்சை எடுத்து வருவதாகவும் விரைவில் மீண்டு வருவேன் என தனது உருக்கமான பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளிவந்த யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

யசோதா படத்திற்க்காக சமீபத்தில் தனியார் ஊடகத்திற்க்கு சமந்தா அளித்த பேட்டியில்..

இந்த அறிய வகை நோய் மயோசிடிஸ்‌ ( தசை வீக்க நோய் ) தாக்கம் அதிகமாக இருப்பத்தின் காரணமாக படபிடிப்புகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலே சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார்..

இந்த நோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்த பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க இருப்பதாக சமந்தா தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது..

மயோசிடிஸ் நோயால் பாதிக்கபட்டுள்ள நடிகை சமந்தா சிகிச்சைகாக தென் கொரியாவிற்க்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடல் நிலை சரியாக இல்லாத காரணத்தால் சினிமாவிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க போவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த சிகிச்சை முடிந்து குணமடைந்த பின்னர் விஜய் தேவர்கொண்டவுடன் குஷி படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version