Cinema NewsKollywood

என் இதயத்தை மாலத்தீவில் விட்டுவிட்டேன்

என் இதயத்தை மாலத்தீவில் விட்டுவிட்டேன் என கேப்சன் செய்து நடிகை திவ்ய பாரதி வெளியிட்ட புகைபடங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது…

என் இதயத்தை மாலத்தீவில் விட்டுவிட்டேன்
divya bharathi

இயக்குனர் சதீஷ் செல்வ்க்குமார் இயக்கத்தில் வெளிவந்த Bachelor திரைபடத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் திவ்ய பாரதி.

bachelor படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, மிஸ்கின், முனிஸ்காந்த், பகவதி பெருமாள், மோனிகா சின்னகோட்லா உள்ளிட்ட பலர் இத்திரைபடத்தில் நடித்து இருந்தனர்..

ஜி. டில்லி பாபு தயாரித்த இப்படத்தில் இசையமைப்பாளர்களாக ஜி.வி.பிரகாஷ் குமார், சித்து குமார், ஏ.எச்.காஷிப், உள்ளிட்டோர் படத்திற்க்கு இசையமைத்திருந்தனர்.

மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்‌வர், எடிட்டர் சன் லோகேஷ் ஆகியோர் bachelor படத்தில் பணியாற்றியுள்ளனர்..

மொத்தம் 175 நிமிடங்கள் கொண்ட இத்திரைபடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கம் (3.12.2021) திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது.

மேலும் இத்திரைபடம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது..

bachelor திரைப்படம் திரை அரங்குகளில் வெளியானது மட்டுமின்றி ஓடிடி தளத்திலும் படக்குழுவினரால் வெளியிடபட்டது.

திரை அரங்கில் இத்திரைபட்டம் 175 நிமிடங்களாக வெளியான நிலையில் ஓடிடி தளத்தில் 15 நிமிட காட்சிகள் கட் செய்யபட்டு 158 நிமிடங்கள் மட்டும் வெளியிடபட்டுள்ளது..

இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நடிக்கும் மதில் மேல் காதல் என்ற புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை திவ்ய பாரதி. இப்படத்தினை வெப்பம் பட இயக்குனர் அஞ்சன அலி கான் இயக்குகிறார்..

மதில் மேல் காதல் படத்திற்க்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். கடந்த மார்ச் மூன்றாம் தேதி படத்தின் முதல் பாடலானது மாலை 6.00 மணிக்கு யுட்யூப் வலைதளத்தில் வெளியானது..

மதில் மேல் காதல் படத்தின் முதல் பாடல் நெஞ்சோரமா என்ற பாடல் யுட்யூபில் இது வரை 1.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாடலாசிரியர் மோகன் ராஜா எழுதிய இப்பாடலை பாடகர்கள் பிரதீப் குமார், மால்வி சுந்தரேசன் ஆகியோர் பாடியுள்ளனர்..

இதை தொடர்ந்து சமீபத்தில் மாலத்தீவிற்க்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை திவ்ய பாரதி அங்கு தான் எடுத்து கொண்ட புகைபடங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்..

திவ்ய பாரதி வெளியிடும் புகைபடங்கள் மற்றும் வீடியோ பதிவுகளுக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெருவதுடன் லைக்க்குகளும், கமெண்ட்களும் அவருக்கு குவிந்து வருகின்றன..

அந்த வகையில் தற்போது மீண்டும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மாலதீவில் எடுத்த புகைப்படங்களை பகிருந்து அதற்க்கு என் மனதை மாலதீவில் விட்டுவிட்டேன் என்ற கேப்ஷனுடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்..

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !