மாநாடு தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை காரணம்?

மாநாடு தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை என படக்குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது..

மாநாடு தீபாவளி ரிலீஸ் இல்லை காரணம்?
STR

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இத்திரைபடம் தொடங்கபட்ட நாள் முதல் இருந்தே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது.

இதற்க்கு நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணி தான் காரணம். ஏனென்றால் இப்படத்தின் மூலம் முதன் முறையாக நடிகர் சிலம்பரசன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணி இணைந்துள்ளது.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கிய மாநாடு திரைப்படம். படத்தின் முதற்கட்ட காட்சிகளை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கபட்டது.

அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்புகளை ஹைத்ராபாத்தில் படமாக்க படக்குழு முடிவு செய்து இருந்தது. ஆனால் அன்றைய சூழலில் அங்கு கொரோனா பெருந்தொற்று காரணமாக படபிடிப்பிற்கு அனுமதி மறுக்கபட்டது.

இதை தொடர்ந்து மாநாடு படப்பிடிப்பும் நிறுத்தபட்டு படபிடிப்பு பணிகளை தள்ளி போடபட்டது. பின்னர் பாதியில் நிறுத்தபட்டு இருந்த படபிடிப்பு வேலைகளை மீண்டும் பாண்டிசேரியில் தொடங்கினர் மாநாடு படக்குழுவினர்.

இதனிடையே நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து கொண்டு இருந்ததால் அப்படத்தின் படபிடிப்பு பணிகளை முழுமையாக முடித்து கொண்டு மாநாடு படபிடிப்பில் கலந்து கொண்டார்.

தற்போது மாநாடு திரைப்படம் படபிடிப்பு பணிகளும் நிறைவடைந்து படத்தின் டீசரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..

மாநாடு டீசர் வெளியான நாள் முதல் இன்று வரை இணையத்தில் 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் இது 357k லைக்குகளை இணையத்தில் வாரி குவித்துள்ளது.

இத்திரைபடம் வரும் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருவதாக படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து உற்சாகத்தில் இருந்த சிம்பு ரசிகர்களுக்கு தற்போது மாநாடு படக்குழு அதிர்ச்சி தகவல் ஒன்றை அறிவித்துள்ளது.

அதாவது, வரும் 2021 தீபாவளிக்கு திரைக்கு வார இருந்த மாநாடு திரைப்படம் தற்போது பின்வாங்கி உள்ளது. தீபாவளிக்கு வெளியாக இருந்த மாநாடு திரைப்படம் வெளியாகும் தேதி மாற்றபட்டுள்ளது.

மாநாடு தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை காரணம் இதோ ?

இது குறித்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில் :

கொரோனா பெருதொற்று சிரமங்களுக்கு இடையே சில வருட உழைப்பின் பயனாக அருவடைக்கு காத்திருக்கிறான் மாநாடு.

இப்படத்தினை வரும் தீபாவளிக்கு வெளியிட அனைத்தும் முழுமையாக செய்யபட்டுவிட்டது.

ஆனால், இது யாரோடும் போட்டியல்ல ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றிற்க்கும் மேற்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம்.

அதை கருத்தில் கொண்டே படத்தில் தீபாவளி அன்று வெளியிட முடிவெடுத்தோம்.

போட்டி என்று ஒருபோதும் நான் படத்தின் வெளியீட்டை பார்ப்பதில்லை அப்படி பார்ப்பது வியாபார யுத்தியும் அல்ல.

நமது மாநாடு திரைப்படம் நன்றாகவும், திருப்த்தியாகவும் வந்துள்ளது அதன் மீது மிக பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிலாம் தான் ஆனால் என்னை நம்பி படத்தின் வியாபாரம், ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கபடக்கூடாது.

அதை போன்று விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியிட்டிற்கு பணம் போட்டவர்கள் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும்.

சில காரணங்களுக்காக என் படமும், அதன் வெற்றியும் யென் பலியாக வேண்டும்.

ஆகையால் மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது.

நவம்பர் 25 ஆம் தேதி மாநாடு வெளியாகும் எனவும். மாநாடு தீபாவளி வெளியிட்டிலிருந்து வெளியேறுகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தீபாவளி அன்று வெளியாகும் திரைபடங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்…

வரும் 2021 தீபாவளி அன்று விஷால், ஆர்யா நடித்த எனிமி திரைப்படம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்தே திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..வைரலாகும் அண்ணாத்த படத்தின் மோஷன்…

Exit mobile version