IPL Final match 2021: csk vs kkr வெற்றி யாருக்கு?

IPL Final match 2021: ஐ‌பி‌எல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்ட போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது…

IPL Final match 2021: csk vs kkr வெற்றி யாருக்கு?
csk v kkr

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ஐ‌பி‌எல் 2021 -இன் 14 வது சீசன் போட்டிகள் நடைபெற்று வந்த வேலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம்

அதிகரித்ததன் காரணமாக வீரர்களின் பாதுகாப்பு கருதி மீதமுள்ள போட்டிகளை தற்காலிமாக ரத்து செய்தது பி‌சி‌சி‌ஐ.

தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து இருந்தாலும் ஐ‌பி‌எல் போட்டிகளை கடந்த ஆண்டை போலவே அரபு நாடுகளில் நடத்த பி‌சி‌சி‌ஐ முடிவு செய்தது.

இதை தொடர்ந்து கடந்த செப்டெம்பர் மாதம் மீண்டும் ஐ‌பி‌எல் 2021- இன் 14வது சீசன் மீதமுள்ள போட்டிகளை நடத்த துவங்கியது பி‌சி‌சி‌ஐ.

இந்த சீசனை பொறுத்த வரை (csk) சென்னை சூப்பர் kings, டெல்லி கேபிடல்ஸ் (dc), மும்பை இந்தியன்ஸ்(MI), ராயல் சேலஞ்சர்ஸ்(rcb), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(kkr), சன் ரைசஸ் ஹைத்ராபாத்(srh), பஞ்சாப் கிங்ஸ்(pbks), ராஜஸ்தான் ராயல்ஸ்(rr) என மொத்தம் 8 அணிகள் விளையாடின.

எட்டு அணிகளில் முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அதிரடி ஆட்டங்களால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

கடந்த சீசனில் முதல் அணியாக சீசனில் இருந்து வெளியேறிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த முதல் அணி என்கின்ற பெருமையயும் பெற்றுள்ளது..

அது மட்டுமின்றி இந்த சீசனில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.

கடந்த சீசனில் சென்னை அணியின் ஆட்டத்தால் ஏமாற்றம் அடைந்து இருந்த சி‌எஸ்‌கே ரசிகர்களுக்கு இந்த சீசனில் இரட்டிப்பு மகிழிச்சியை வழங்கியுள்ளது சி‌எஸ்‌கே அணி.

இதை தொடர்ந்து 2021-கான ஐ‌பி‌எல் போட்டிகள் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய

போட்டிகள் நடுவில் மே மாதம் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் செப்டெம்பர் மாதம் தொடங்கியது..

செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சீசன் 14வது லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற

IPL Final match 2021

இரு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று அக்டோபர் 15 ஆம் தேதி ஐ‌பி‌எல் 2021 -இன் இறுதி போட்டியை எதிர்கொள்கின்றது..

பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக கருதபடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்து வீச்சில் சிறந்து விளங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடும் இந்த போட்டி ஐ‌பி‌எல் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்த இரு அணிகள் மோதி கொள்ளும் போட்டி துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் இன்று மாலை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது..

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது..

இதனை அடுத்து முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி தற்போது விளையாடி வருகிறது.

Exit mobile version