NewsTamilnadu

தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிகரித்த கரோனா…

Last Updated on July 30, 2021 by Dinesh

தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிகரித்த கரோனா இன்று 5,849-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 1,86,492-ஆக உயர்ந்துள்ளது சென்னையில் மட்டும் இன்று 1,171- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிகை 89,561-ஆக அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனா தொற்று பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.

இதனை கட்டுபடுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன் எடுத்து வருகிறது..

இருப்பினும் கொரோனா தொற்றினால் பாதிக்க பாடுவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள மத்திய,மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாட்டு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் அறிவித்து கேட்டு கொண்டுள்ளது..

அந்த கட்டுபாட்டு விதிமுறையில் மத்திய, மாநில அரசுகள் கூறியிருப்பது. கட்டாயம் முக கவசம், தனி மனித இடைவெளி, தேவை இன்றி வெளியில் சுற்றுவதை தவிர்த்தல்,.

தேவையற்ற பயணத்தை தவிர்த்தல், பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்த்தல் போன்ற அடிப்படை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி அறிவிப்பு வெளியிட்டது..

தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிகரித்த கரோனா…

இதனை அடுத்து இன்று தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 5,000 ஆயிரத்தை கடந்தது. மேலும் இன்று கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக உள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.. சென்னையை பொறுத்தவரை கொரோனா தாக்கத்தின் வேகம் அதிகரித்து வருவதால் சென்னை மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் சென்னையை அடுத்து மற்ற மாவட்டங்களில் விருதுநகர், தூத்துக்குடி, ராணிபேட் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று உயர்ந்துள்ளது.

அரியலூர் -26, செங்கல்பட்டு – 223, சென்னை-1,171, கோயம்புத்தூர் – 178, கடலூர் – 67, தர்மபுரி – 7, திண்டுக்கல் – 99 ஈரோடு – 6, கள்ளகுருச்சி – 84, காஞ்சிபுரம் – 325,

கன்னியாகுமரி – 150, கரூர் – 4, கிருஷ்ணகிரி – 69, மதுரை – 197 நாகப்பட்டினம் – 14, நாமக்கல் – 34, நீலகிரி – 12, பெரம்பலூர் – 15, புதுகோட்டை – 59, ராமநாதபுரம் – 88,

ராணிபேட் – 414, சேலம் – 98, சிவகங்கை – 70, தென்காசி – 85, தஞ்சாவூர் – 106, தேனீ – 164, திருப்பத்தூர் – 48, திருவள்ளூர் – 430 திருவண்ணாமலை – 208,

திருவாரூர் – 44, தூத்துக்குடி – 323, திருநேல்வி – 112, திருப்பூர் – 29, திருச்சி – 213, வேலூர் – 137, விழுப்புரம் – 103, விருதுநகர் – 363. இதன் மூலம் தமிழகத்தில் கொரோன தொற்றின் எண்ணிக்கை 1,89,492- ஆக அதிகரித்தது.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிகரித்த கரோனா தமிழகத்தின் பலி எண்ணிக்கை 79-பேர் உட்பட 2,700+444 (விடுபட்ட மரணங்கள்) என மொத்தம் 3,144-பேர் இதுவரை

கொரோனா தொற்றினால் உயிர் இழந்துள்ளனர். இதை அடுத்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4,910- பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !