NewsTamilnadu

பாலு எங்கே போன?-இளையராஜா உருக்கம்

பாலு எங்கே போன?-இளையராஜா உருக்கம் பின்னணி பாடகர் எஸ்‌.பி. பாலசுப்ரமணியம் மறைவிற்கு இளையராஜா உருக்கமான பதிவு.

பாலு எங்கே போன?இளையராஜா உருக்கம்
spbalasubramanium,

எஸ்‌.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

பின்னர் சில நாட்களில் அவர் உடல் நிலை மோசமானதாக வெண்ட்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிக்கிசை பிரிவில் அனுமதிக்கபட்டு சிக்கிசை பெற்று வந்தார்.

மருத்துவ சிகிச்சை

வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் எஸ்.‌பி. பாலசுப்ரமணியம் அவர் உடல் தேறி வருவதாகவும் நலமுடன் மீண்டு வருவார் என அவரது மகன் பாடகர் எஸ்.‌பி. சரண் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று திடீரென்று அவரது உடல் நிலை மோசமானதாக தகவல்கள் வெளிவந்தன. இதை தொடர்ந்து மீண்டும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

வெண்டிலேட்டர் மற்றும் உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு தொடர்ந்து இரவு முழுவதும் சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் எதிர்பாரா விதமாக சிகிச்சை பலன் அளிக்காமல் எஸ்‌.பி. பாலசுப்ரமணியம் உயிர் பிரிந்தது.

பாலு எங்கே போன?-இளையராஜா உருக்கம்

கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று பலனளிக்காமல் எஸ்‌பி பாலசுப்ரமணியம் உயிர் பிரிந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் என அனைவரும் தங்கள் இரங்கல்களை மிகுந்த வருத்ததுடனும் வேதனையுடனும் தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜா உருக்கம்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் இளைய ராஜாவின் இசை என்பது சினிமா துறையில் ஒரு மையில் கல் 90களில் வெளிவந்த தமிழ் திரைபடங்கள் பெரும்பாலும் இவர் இசையமைத்தது தான்.

இளைய ராஜாவின் இசையில் வெளிவந்த பல தமிழ் படங்கள் மிக பெரிய வெற்றி படங்களாக தான் அமையும். அந்த படங்கள் அனைத்தும் 100 நாள் 150 நாட்கள் எல்லாம் கடந்து செல்லும் அப்படங்களில் இடம் பெரும் இளைய ராஜாவின் பாடல்கள் இன்று வரை பெரும்பாலானவர்களால் ரசிக்கபட்டு வருகிறது.

இவரின் இசையில் வெளிவரும் அனைத்து படங்களிலும் பெரும்பாலும் எஸ்‌பி. பாலசுப்ரமணியம் பாடிய பாடல்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அந்த அளவிற்கு இவர்களின் நட்பும் இணைபிரியாமல் இருந்தது.

இதனை தொடர்ந்து எஸ்‌பிபி மறைவுக்கு திரைதுறையினர் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது உருக்கமான பதிவு ஒன்றை பாடகர் எஸ்‌பி. பாலசுப்ரமணியம்க்காக வெளியிட்டுள்ளார்.

பாலு எங்கே போன?-இளையராஜா பாலு சீக்கிரம் எழுந்து வா உன்ன பார்க்க நா காத்து இருக்கணு சொன்ன நீ கேக்கல. இங்கே உலகம் ஒரு சூனியமா போச்சி உலகத்தில ஒண்ணும்

எனக்கு தெரியல பேசறதுக்கு பேச்சு வரல சொல்லறதுக்கு வார்த வரல என்ன சொல்லுறத்துனே தெரியல எல்லா துக்கதுக்கும் ஒரு அளவு இருக்கு ஆனா இதுக்கு அளவு இல்ல இவ்வாறான உருக்கமான பதிவை தெரிவிதுள்ளார்.

எஸ்‌.பி .பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம்

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.04 மணியளவில் எஸ்‌பி பாலசுப்ரமணியம் உடல் பிரிந்தது இதனை அவரது மகன் எஸ்‌பி சரண் தெரிவித்தார்.

காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்…

இதனை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பார்வைக்கு வைக்கபட்டுள்ளது. .திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் தங்கள் இரங்கல்களை நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

நாளை காலை 11 மணி அளவில் எஸ்‌பி பாலசுப்ரமணியம் உடல் செங்குன்றத்தில் உள்ள அவரது இல்லத்தில் நல்லடக்கம் செய்ய உள்ளது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !