BiggBoss Tamil Season 6 ஆரம்பமாகி இன்றுடன் மூன்றாவது நாளை எட்டியுள்ளது. இன்று காலை முதல் வெளியான பிரோமோக்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது..
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது 6-வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக்பாஸ் தமிழ். இந்நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமே நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யபட்ட போட்டியாளர்களுக்கு biggboss day 1 முதல் 100 நாட்கள் வரை கடுமையான விதிமுறைகளுடன் கூடிய போட்டிகள் கொடுக்கபடும்
அதில் பிக்பாஸால் கொடுக்கபடும் விதிமுறைகளை தனி நபராக இருந்தாலும் சரி அல்லது குழுவாக இருந்தாலும் சரி போட்டியின் விதிமுறையிக்கு உட்பட்டு விளையாடும் போட்டியாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கபடடுகிறார்..
அவ்வாறு கடுமையான போட்டிகளை சந்ததித்து மக்களின் ஆதவரோடு இருக்கும் போட்டியாளர்கள் தான் கடைசி வரை பிக்பாஸ் வீட்டினுள் இருக்க முடியும். பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும்.
100 நாட்களில் போட்டியாளர்களுக்கு இடையே நடைபெறும் வாக்குவாதம், சண்டைகள், சலசப்புகள் என நாளுக்கு நாள் நிகழ்ச்சியில் பரபரப்பை கூடி கொண்டே போவதால் இந்நிகழ்ச்சியை காண மக்களிடையே ஆரவமும் அதிகம் காணபடுகிறது..
அதை போன்று, தற்போது தொடங்கி நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இன்று காலை முதல் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரோமோக்களில் ஜிபி முத்து மற்றும் சக போட்டியாளர் தனலக்ஷ்மி,ஆய்ஷா ஆகியோர் இடையே சலசலப்பு இருப்பதை காண முடிந்தது..
கடைசியாக வெளியான மூன்றாவது பிரோமோவில் நா சாரினு சொன்னதுக்கே மொரைக்குறாங்க என ஜிபி முத்து சக போட்டியாளர்களிடம் சொல்ல,
அதுக்கு தனலக்ஷ்மி திரும்பி பாத்ததுக்கே மொறச்சதா ஓ இது தான் உங்களுக்கு புரியுதா நடிக்காதீங்க என்கிட்ட என கூறி விட்டு செல்கிறார்..
இதனால் கோபமடைந்த ஜிபி முத்து நா நடிக்கிறத நீ பாத்தியா நா உன்ன என் பொண்ணு மாதிரி நினைக்கரன் என்ற காரசார விவாதம் நடைபெறுகிறது.
பிரோமோவின் இறுதியில் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டின் டைனிங் ஹாலில் அமர்ந்து என நடிக்கிறனு சொல்றாங்கணு அழ ஆரம்பிங்க அவரை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்கிறார்கள்.
இந்த பிரோமோக்களை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் இது குறித்து சமூக வலைதளத்தில் விவாதித்து வருகின்றனர்.