Last Updated on October 7, 2022 by Dinesh
உலக முழுவதும் மிகவும் பெரிய அளவில் மதிக்கபடும் நோபல் பரிசு வருடந்தோரும் நடத்தபட்டு வருகிறது. அதை போல் இந்த வருடத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது..

உலகின் மதிப்புமிக்க விருதாக கருதபடும் நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் நடத்தபட்டு வருகிறது. இந்த விருதுகளானது வேதியியல், இயற்பியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளுக்கு வழங்கபட்டு வருகிறது..
அதன் அடிபடையில் இந்த வருடத்திற்க்கான அமைதிக்கான நோபல் பரிசை பெலாரஸை சேர்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு வழங்குவதாக நோர்வே நோபல் கமிட்டி முடிவு செய்துள்ளது..
மேலும், இது ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான civil liberties ஆகிய அமைப்புகளுக்கும் வழங்க முடிவு செய்துள்ளது..
உக்ரைன் மனித உரிமைகள் அமைப்பு
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக நிறுவபட்ட உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு
உக்ரேனில் மனித உரிமைகளை வலுபடுத்தவும், உக்ரேனை முழு ஜனநாயக நாடாக மற்றும் நிலைப்பாட்டை எடுத்து உள்ளது இதற்காக இந்த அமைப்பிற்க்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டுள்ளது..
ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு
பிப்ரவரி 2022-இல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த போது உக்ரேனிய மக்களுக்கு எதிரான ரஷ்யா செய்த போர் குற்றங்களை அடையாளம் கண்டு அதனை ஆவனபடுத்தும் முயற்சியில் ரஷ்ய மனித உரிமைகள் ஈடுபட்டு வந்தது.
மேலும் போர் குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளை அதனை பொறுப்பேற்க வைப்பதில் முன்னோடியாக இருந்து வந்தது. இதன் காரணமாக இந்த அமைப்பிற்க்கு நோபல் பரிசு அறிவிக்கபட்டுள்ளது..
அலெஸ் பியாலியாட்ஸ்கி
அலெஸ் பியாலியாட்ஸ்கி 1980-களின் நடுபகுதியில் பெலாரஸில் ஜனநாயக இயக்கம் தொடங்கியவர்களில் இவரும் ஒருவர். இவர் தான் பிறந்த சொந்த நாட்டில் ஜனாயகம் மற்றும் அமைதியான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அற்பணித்தற்காக இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கபடுகிறது