NewsTamilnadu

ஊரடங்கில் திருமண விழாவிற்கு அனுமதி

ஊரடங்கில் திருமண விழாவிற்கு அனுமதி வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது…

ஊரடங்கில் திருமண விழாவிற்கு அனுமதி
Marriage Function

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்ததன் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுபாடுகளை அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்தது.

வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றை ஜனவரி (06 -01-2022 ) ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5.00 மணி வரை இயங்காது என்று நள்ளிரவு ஊரடங்கிணை அமல்படுத்தியது தமிழக அரசு.

அமல்படுத்தபட்டுள்ள இரவு நேர ஊரடங்கில் பேருந்து சேவைகள், மருந்தகங்கள், சரக்கு வாகனங்கள், பெட்ரோல் பங்குகள்,

பால் மற்றும் செய்தி தாள்கள், ஏடிஎம் சேவைகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஆகியவற்றை தொடர்ந்து இயங்கும் என அறிவித்து இருந்தது.

இதை தொடர்ந்து வரும் ஞாயிற்று கிழமை ஜனவரி (09 -01 – 2022 ) ஆம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

முழு ஊரடங்கின் போது மருந்தகம், பால் மற்றும் செய்திதாள், பெட்ரோல் பங்குகள், சரக்கு வாகனங்கள், ஏடிஎம் உள்ளிட்டவை இயங்க அனுமதி அளிக்கபட்டுள்ளது.

இதை தவிர பொது போக்குவரத்துகள், மெட்ரோ ரயில் சேவைகள் போன்றவைகளும் இயங்க அனுமதி அளிக்கபடவில்லை. மேலும் வரும் 09-01-2022 ஞாயிற்று கிழமையில் உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கபட்டுள்ளது.

நாளை ஊரடங்கின் போது பேருந்து, விமானம், ரயில் உள்ளிட்டவற்றில் பயணிக்க டிக்கெட் இருந்தால் அதனை பரிசோதனை செய்யும் பொழுது காண்பித்துவிட்டு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கபட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ஏற்கனவே அறிவித்த கட்டுபாடுகளின் படி திருமண விழாக்களுக்கு 100 நபர்கள் வரை அனுமதி வழங்கபட்டுள்ளது.

அதன் படி நாளை முழு ஊரடங்கில் (09-01-2022 ) திருமண நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்று கிழமையில் திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு,

திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகளை காண்பித்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்கபடுகின்றனர்..

திருமண மண்டபங்களில் 100 நபர்கள் வரை மட்டும் கலந்து கொள்ள அனுமதி வழங்கபட்டுள்ளது.

மேலும் முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !